இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையேயான ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. உயர்திரு.R.சண்முகசுந்தரம், இராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் தலைமை வகித்தார்கள். திரு.E.கார்த்திக், IPS., இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருமதி.A.சுபத்ரா, மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி, திரு.S.மலர்மன்னன், பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிபதி (FTC), திருமதி.ப்ரீத்தா, சார்பு நீதிபதி, I/c தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், திரு.ஜெயசிங், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், திரு.லயோலா இக்னேசியஸ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கு விசாரணை உதவி இயக்குனர், அரசு வழக்குரைஞர்கள், அரசு கூடுதல் வழக்குரைஞர்கள், அரசு உதவி வழக்குரைஞர்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுப்பது, விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், காவல்துறை மற்றும் நீதித்துறை ஒருங்கிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்