திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக மேலப்பாலாமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக நடத்தப்பட்ட இந்த ஓவிய போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஓவியங்கள் வரைந்து வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., நேரில் அழைத்து அவர்களின் கலை திறமையை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர்க பாலசுப்பிரமணியன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புபிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்