பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 04 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 08 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 12 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 19.1.2022-ம் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
ஏலம் எடுக்க விரும்புவோர் 18.1.2022-ம் தேதி மாலை 5 மணி வரை பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம்.
மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் 18.1.2022 அன்று ஒரு இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000 மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.2000 முன் பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஏலம் எடுத்த உடன் முழு தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (GST) இருசக்கர வாகனங்களுக்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18%) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். என பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.
















