கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப.,அவர்கள் உத்தரவின்பேரில், உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 13 நபர்களை* கைது செய்து அவர்களிடமிருந்து 97 மது பாட்டில்கள் மற்றும் 32 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்