திருநெல்வேலி : கொரோனா நோய்த்தொற்று நாடெங்கும் பரவிவரும் இச்சூழ்நிலையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் காவல் துறையினரின் பணிச்சுமையை போக்கும் வகையில் அவர்களுக்கு நான்கு (18.06.2020 – 21.06.2020) நாட்கள் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார்.
காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் முன்னிலையில் யோகா கலை நிபுணர் திரு. ஜெகதீசன் அவர்கள் பயிற்சியின் கீழ் ஆயுதப்படை காவலர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்த யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். இந்த யோகா பயிற்சி வகுப்பினை நிறைவு செய்யும் வகையில் இன்று நாடு முழுவதும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை காவல்துறையினர் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இன்று யோகா பயிற்சி மேற்கொண்டனர். இத்தகைய யோகா வகுப்பானது, காவல்துறையினர் ஆரோக்கியத்துடன் மட்டுமில்லாமல் மனதை ஒருநிலைப்படுத்தவும், மனதை கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி