கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஸ்மார்ட் காவலர் ஆப்’ வாயிலாக, ‘இ- பீட்’ முறையை கள்ளக்குறிச்சி நகரகாவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன் IPS., அவர்கள் துவக்கிவைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூன்று காவல் உட்கோட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் ‘இ- பீட்’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது, இதன் மூலம் இரவு மற்றும் பகல் ரோந்து பணிக்கு செல்லும் காவலர்கள், ‘ஸ்மார்ட் காவலர் ஆப்’ மொபைல் செயலியில் கெட்ட நடத்தையர்கள், பழங்குற்றவாளிகளின் விபரங்கள், ATM, வங்கி, பூட்டிய வீடுகள் பற்றிய விபரம் போன்ற தகவல்கள் இச்செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் வீடுகளில் தனியாக வசித்து வருவோர், முதியோர்கள் வீடுகள், பூட்டிய வீடுகள் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால் ரோந்து காவலர்கள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று தெரிவித்தார்.
மேலும் இ- பீட் செயலியின் மூலம் ரோந்து செல்லும் காவலர்களுக்கு, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் SMS வாயிலாக குறுந்தகவல் அனுப்பும் வசதியும் உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இரமேஷ், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் திரு.இரவிச்சந்திரன், மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.