சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கொட்ட தேவகோட்டை நகர காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மரியாதைக்குரிய ராமச்சந்திரன் அவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ததை தமிழ்நாடு காவல்துறை படைத்தலைவர் மற்றும் இயக்குனர் உயர்திரு டாக்டர் சி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ், அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். உடன் இராமநாதபுரம் சகர காவல் துறை தலைவர் பெரும் மதிப்புக்குரிய டாக்டர் துரை ஐபிஎஸ் அவர்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய தங்கராஜ், ஐ.பி.எஸ், அவர்கள் மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டை தேவகோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக்குரிய சரவணன் அவர்கள் உள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி