தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் போதைப்பொருட்களுக்கு எதிராக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கும்பகோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சிவசெந்தில்குமார் அவர்கள் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.டேவிட் மற்றும் காவலர்கள் அடங்கிய குழு மேற்படி நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருள் விற்பனைக்கு வைத்திருந்த IO கிலோ கஞ்சா கைப்பற்றப்ட்டு குற்றவாளியான அருண் என்கிற கீர்த்திவாசன் மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.