திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு தனியார் மண்டபத்தில் ஒரு முக்கிய பிரமுகரின் வீட்டு காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் சீர் கொண்டு வந்த ஊர்வலம் வரும் பொழுது கிரேன் மூலம் பெரிய மாலை கொண்டுவரப்பட்டது. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இதில் மண்டபத்தின் அருகே நிறுத்தி இருந்த ஒரு காரில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தீ பற்றியது. கார் மள மளவென தீ பற்றி எரிந்தது. அங்கிருந்தவர்கள் பைப்பின் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். கார் முற்றிலும் எரிந்து சேதமானது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா