மதுரை : சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன் அடிப்படையில், மதுரை மாவட்ட எஸ்பி அறிவுறுத்தலின்படி, தனிப்படை போலீசார் மேலக்கால் பகுதிகளில் ரோந்து சென்றனர் அப்போது, கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த வினோத்குமார் முத்துராஜ் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து, விசாரித்ததில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்த 1,350 கிலோ கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.
மேலும்,இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சமீபகாலமாக சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால், அதிக அளவில்.சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக, சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் குத்தி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகையால், மாவட்ட எஸ்.பி. தனிக்கவனம் செலுத்தி ,சோழவந்தான் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்களை விற்பனை செய்யும் இளைஞர்களை நல்வழி படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி