கோவை: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு.சந்திரன் அவர்களது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமிகடாய் என்பவருடைய மகன் ராஜன் கடாய் 30. என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது புகார் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்