திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் மன்னார்குடி உட்கோட்டம், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது ஒடிசாவிலிருந்து ஆந்திரா வழியாக தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் மார்க்கமாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் 110 கிலோ கஞ்சா கடத்தி வந்த – 1.கிருஷ்ணன் (37). த/பெ. நாகராஜ், கிளிஞ்சல்மேடு, காரைக்கால், 2. குமார் (43). த/பெ. நாகூரான், கீழத்தோட்டம், இராஜாமடம், அதிராம்பட்டிணம், தஞ்சாவூர் மாவட்டம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி, நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் படி (15.06.2025) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்