கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு காவல் நிலையத்தில் நீண்ட காலமாக சிறப்பாக பணியாற்றிய சிறப்பு நிலைய அலுவலர் திரு. தேவராஜன் அவர்கள், 31.05.2025 அன்று தனது அதிகார பூர்வ பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது பணி வாழ்க்கை முழுக்க அவர் மேற்கொண்ட தன்னலமற்ற சேவையை நினைவுகூர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஓசூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் சிறப்பு பணி நிறைவு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட அலுவலர் திரு. மா. வேலு, கண்காணிப்பாளர் திரு. பிரபாகர், நிலை அலுவலர் தா. நாக விஜயன், போக்குவரத்து நிலை அலுவலர் கோ. வெங்கடாசலம், நிலைய அலுவலர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவில் பணியாற்றும் சக ஊழியர்கள், உயரதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து திரு. தேவராஜன் அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி, அவரது பணியியல் சாதனைகளை பாராட்டி கௌரவித்தனர்.
தனது பணிக்காலத்தில் சமூகப் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயல்பட்ட அவரது சேவை, சக ஊழியர்களுக்கும் புதிய தலைமுறைக்கும் ஒரு மிகப் பெரிய முன்மாதிரியாக விளங்குகிறது.
இந்த நிகழ்வு, அவரின் பணி வாழ்க்கையின் ஒரு முக்கியமான பரிசுத்த பக்கமாகும் என்றும், ஓய்வுக்குப் பிறகும் அவர் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்