தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 35 ஆண்கள் 6 பெண்கள் என 41 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக (Home Guards) தேர்வு செய்யப்பட உள்ளனர் எனவும், விண்ணப்பதாரர்கள் (21.12.2022) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் உரிய சான்றிதழ்களுடன் ஆஜராகுமாறு கடந்த (14.12.2022) அன்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி (21.12.2022) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 52 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 389 பேர் ஆஜராகியிருந்தனர்.
ஆஜரான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உயரம், கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் தலைமயில் நடைபெற்றது. இத்தேர்வு தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. ஜெயராஜ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து, உதவி ஆய்வாளர்கள் திரு. கணேச மணிகண்டன், திரு. ஈஸ்வரமூர்த்தி, திரு. நடராஜன், ஊர்க்காவல்படை வட்டார தளவாய் திரு. பாலமுருகன், துணை வட்டார தளவாய் திருமதி. கௌசல்யா, ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.