திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு வனசரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனக்குழுவினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மணலூர் பகுதியில் உடும்பு வேட்டையாடிய சித்தரேவு பகுதியை சேர்ந்த சகாதேவன்(19). கருப்பையா(19). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து உடும்பு, அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய யுவராமகிருஷ்ணன் என்பவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா