சிவகங்கை, ஜூன் 5:”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டத்தில் வரும் 18.06.2025 அன்று மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமை முன்னிட்டு, ஜூன் 4 முதல் ஜூன் 16 வரை, இளையான்குடி வட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், பிரச்சனைகள், மற்றும் தேவைகளுக்கான மனுக்களை நேரில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.
இந்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம், அரசாணை (நிலை) எண் 22, நாள்: 29.01.2024-இன் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இதன் நோக்கம், மக்களின் இடத்திற்கு நேரிலேயே அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை கொண்டு செல்வது மற்றும் பொதுமக்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் கள ஆய்வில் ஈடுபடுவதாகும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு.
- பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெற்றுக்கொள்வது.
- அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தல்.
- பொதுமக்களின் குறைகளை உடனடியாக பதிவு செய்து நடவடிக்கை.
பொதுமக்கள் கவனத்திற்கு:
இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது தேவைகள் தொடர்பான மனுக்களை 04.06.2025 முதல் 16.06.2025 வரை நேரில் அளித்து, ஏற்புடைய தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி