திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், எரவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தடைசெய்யப்பட்ட 10 கிலோ குட்கா பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தென்கரை அரசலாறு அருகே கருவாக்காட்டில் 332 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைதிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு குட்கா விற்பனையில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, குட்கா, மது விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
















