இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற ரமேஷ், கணேஷ்ராம் மற்றும் தங்கராஜ் ஆகியோரை SI திரு.பூமிநாதன் அவர்கள் COTPA Act-ன் கீழ் கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தார்.
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 பேர் கைது
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று 19.12.2020-ம் தேதி மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோத மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 9 நபர்களை TNP Act-ன் கீழ் கைது செய்தனர்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்