இன்றைய கோவை கிரைம்ஸ்

குப்பையை அகற்ற கூறியவருக்கு அடிஉதை மூவரிடம் விசாரணை

பாப்பநாயக்கன் பாளையம் பரமேஸ்வரன் பிள்ளை லே-அவுட் பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் ஆனந்தராஜ். இவரது வீட்டின் அருகில் குடியிருப்பவர் திருமேனி. திருமேனி  தனது வீட்டின் பின்புறம் குப்பைகளை அதிகளவில் குவித்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதை ஆனந்தராஜ் பலமுறை எடுத்துக் கூறியும்  அந்த குப்பைகளை அகற்ற வில்லை. இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் ஆனந்தராஜ் திருமேனியிடம்  எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த திருமேனி மற்றும் அவரது நண்பர்கள் ரவி, செந்தில் ஆகியோர் ஆனந்தராஜ் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்தனர். தொடர்ந்து ஆனந்தராஜின் தாயாரிடம் தகராறு செய்ததோடு அங்கிருந்த உருட்டுக்கட்டையால் அவரை  தாக்கினர். இதில் ஆனந்தராஜின்  தாயாருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆனந்தராஜ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.