திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் இன்று (25.10.2025) திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல், 181, 1098 உதவி எண், காவலன் செயலி பயன்பாடுகள் குறித்தும் ஆபத்துக் காலங்களில் காவல்துறையின் உதவியை எவ்வாறு நாடுவது என்பது குறித்தும், இணைய வழி குற்ற தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
















