மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் இணைய தளத்தில் மணல்மேடு ஆத்தூர் பகுதியில் பாண்டி சாராய விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில் மயிலாடு துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் உடனடியாக ஆத்தூர் பகுதியில் சோதனை நடத்தி பாண்டி சாராயம் விற்பனை செய்த நபரை கைது செய்து பாண்டி சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.