திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்த ஹரிஹரசுதன் (35), என்பவரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி ரூ.1,03,000/- பணத்தை நூதன முறையில் ஏமாற்றியதாக ஹரிஹரசுதன் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில், புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் உத்தரவுப்படி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து மர்ம நபரின் வங்கி கணக்கை முடக்கம் செய்து ரூ.1,03,000/- பணத்தை மீட்டனர் இதையடுத்து (29.08.2022) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் திரு.ஹரிஹரசுதன் அவர்களிடம் ரூ.1,03,000/- பணத்தை ஒப்படைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா