இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆயுதப்படை தலைமையிடத்தில் தற்காலிக பட்டாசு கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. ராமச்சந்திரன் (DCRB), திரு. வெங்கடகிருஷ்ணன் (IUCAW), காவல் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை ஆளிநர்கள் உடன் இருந்தனர். மேலும் இந்த விற்பனையில் பட்டாசுகள் காவலர்களின் குடும்பங்களுக்கு மானிய விலையிலும் மற்ற பொதுமக்களுக்கு குறிப்பிட்ட சலுகை விலையிலும் இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையிடத்தில் விற்பனை செய்யப்படுகின்றது என்பதனை தெரிவிக்கப்படுகிறது ..