சேலம் : சேலம் மாவட்டம், ஏற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலை பாதையில் சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான எச்சரிக்கை பலகையினை எடுத்துக்கொண்டு நடனம் ஆடுவது போல் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஏற்காடு காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இச்செயலில் ஈடுபட்ட அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய விலை மதிப்புமிக்க இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட உள்ளது.அவர்களது பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, எச்சரித்து உரிய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்