மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள கிழக்கு வாசல் பங்காளிகளுக்கு பாக்கியபட்ட ஸ்ரீ அண்ணாகாமு, உருமண கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த சிறப்பு யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், அதனைத் தொடர்ந்து 21 விதமான சிறப்பு யாகசாலை பூஜைகள், மகா பூர்நாஹிதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜை செய்யபட்டு புனித நீர் அடங்கிய குடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சிலைகள் மீது ஊற்றப்பட்டது. பின்னர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆதனூர் கிழக்கு வாசல் பங்காளிகள் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி