சென்னை : சூணாம்பேடு அருகே அரசூர் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 22 குடும்பத்தினர் வீடுகளை கட்டியுள்ளனர். அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, மின்சார வசதிகள் பெற்று, 40 ஆண்டுகளாக வசிக்கின்றனர்.இந்நிலையில், ஏரி நீர்நிலை பகுதியில், கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை அகற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறி, செய்யூர் தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் மார்ச் 26ல் அங்கு சென்றனர். தாசில்தாரின் வாகனத்தை, அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பலத்த காவல் பாதுகாப்புடன், வருவாய் துறையினர் நேற்று சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த இரண்டு ஜே.சி.பி., இயந்திரங்களை, கிராம மக்கள் வழி மறித்தனர்.மேலும், ‘மாற்று இடம் வழங்குவதாக கூறி இரு மாதங்கள் ஆகியும் தரவில்லை. இனி வழங்கவுள்ள மாற்று இடத்தில், தொகுப்பு வீடு கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக்கூறி, சூணாம்பேடு தொழுப்பேடு சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
செய்யூர் தாசில்தார் சகுந்தலா, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி ஆகியோர், அவர்களிடம் பேச்சு நடத்தினர். அதிகாரிகள், ‘மாற்று இடம் உடனடியாக வழங்கப்படும். அந்த இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறியதை அடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, இன்று நடக்கவுள்ளது.
செய்யூர் தாசில்தார் சகுந்தலா, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி ஆகியோர், அவர்களிடம் பேச்சு நடத்தினர். அதிகாரிகள், ‘மாற்று இடம் உடனடியாக வழங்கப்படும். அந்த இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறியதை அடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, இன்று நடக்கவுள்ளது.