மதுரை, ஜூன் 7: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மதுரை வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள் திருமதி வனிதா, திரு இனிகோ திவ்யன், விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார், மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) கமாண்டன்ட் விஸ்வநாதன், மற்றும் விமான நிலையத்தின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமித்ஷா அவர்கள், ஜூன் 8 (08.06.2025) அன்று இரவு 8.30 மணியளவில், டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை விமான நிலையத்தை வந்தடைவார். வருகைக்கு பிறகு, சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஓய்வு விடுதியில் தங்கி இருப்பார்.
அடுத்த நாள் (09.06.2025) காலை, அமித்ஷா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து, பின்னர் மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சரின் பயண வழித்தடங்கள், விமான நிலையத்திலிருந்து ஓய்வு விடுதி மற்றும் கூட்டம் நடைபெறும் இடம் வரை தடையற்ற மற்றும் பாதுகாப்பான நடைமுறை என்னென்ன இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு அமைப்பின் பொறுப்புகள் தெளிவுபடுத்தப்பட்டன.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி