செங்கல்பட்டு: தமிழ்நாடு காவல்துறை மூன்றாவது முறையாக அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டியை நடத்துகிறது. இதில் 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி 2024-2025 செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கம், தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி வளாகத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் (17.03.2025) முதல் (22.03.2025) வரை நடைபெறுகிறது. 25வது அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியின் பிரம்மாண்டமான தொடக்கவிழா ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் கவாத்து மைதானத்தில் நடைபெறுவது தமிழக காவல்துறையின் பெருமைக்கு ஒரு மைல் கல் ஆகும். 25வது அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியை தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் படைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் துவக்கி வைத்தார். மற்றும் 25வது அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி 2024-25ன் தலைவர் ஏற்பாட்டு செயலாளர் காவல்துறை கூடுதல் இயக்குனர் தினகரன், இ.கா.ப. அவர்கள், தலைமை விருந்தினர் அவர்களை வரவேற்று, ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள், நடுவர் குழுவினர்கள், மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் படைத்தலைவர் அவர்கள் காவல்துறையினரின் அலங்கார அணிவகுப்புக்காப்பு மற்றும் கவாத்து மரியாதையை ஏற்றுக்கொண்டார். துலைமை விருந்தினர் அவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் தனிச்சிறப்பு வாய்ந்த சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை அங்கீகரிக்கும் உயரிய அங்கீகாரமான குடியரசு தலைவரின் நிஷான் வண்ணக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்.மற்றும் தினகரன், இ.கா.ப. காவல்துறை கூடுதல் இயக்குனர், ஆப்பரேஷன்ஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். தலைமை விருந்தினர் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் படைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் வீரர்களிடையே துப்பாக்கி சுடும் போட்டியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் துப்பாக்கி சுடுதல் போட்டி நெருக்கடியான சூழ்நிலைகளை கையாளுவதற்கு பயிற்றுவிக்கிறது என்றும் கூறினார்.
25-வது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 ஐ. தலைமை விருந்தினர். அகில இந்திய காவல் கட்டுப்பாட்டு வாரியகொடியை ஏற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளின் கொடிகள் ஏற்றப்பட்டன. துவக்கவிழா நிகழ்வு சத்தியபிரமாணம் எடுத்தும், தலைமை விருந்தினருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்