திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மீஞ்சூரில் சிமெண்ட் கடை வைத்து நட த்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு கடை அடைத்து விட்டு வீட்டிற்கு வரும் போது, அரியன்வாயல் அருகில் உள்ள அம்மாசெட்டிகுளத்தின் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் வழி மடக்கி சட்டையை பிடித்து அடித்து பையில் இருந்த 10 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர்.
அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் மீட்டு சென்னை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் மீஞ்சூர் காவல் துறையினர் சம்பவம் இடத்திற்கு விசாரணை செய்ததில் வழிப்பறி கொள்ளையர்கள் செல்போன் விட்டு சென்று விட்டனர். அதில் உள்ள தகவல் படி பொன்னேரி அடுத்த உப்பரப்பாளையம் பெருமாள் கோயிலை சேர்ந்த சங்கர் (20) பெரும்பேடு தேவராஞ்சேரி சேர்ந்த சூர்யா (19)பெரியாகவனம் சேர்ந்த அமீர் (எ ) ஜெயசாரதி (20) என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்களை பிடித்து சிறையில் அடைத்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்