கோவை : கோவை திருப்பூரில் சிக்மா ரெடிமேடு தொழிற்சாலை உள்ளது இதன் நிர்வாகியாக இருப்பவர் சம்பத்குமார். இவர் திருப்பூரில் உள்ள விஜயா வங்கியில் கடன் பெறுவதற்காக போலி ஆவணங்கள் கொடுத்து உள்ளார் அப்போது வங்கியின் மேலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மற்றொரு அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோர் அந்த ஆவணங்களை சரிபார்க்காமல் ஏற்றுக்கொண்டு ரூ 51 லட்சத்து 5 ஆயிரம் கடன் வழங்கி உள்ளனர் வங்கி அதிகாரிகள் தணிக்கை செய்தபோது சம்பத்குமார் கொடுத்தது போலி ஆவணங்கள் என்பது கண்டுபிடிக்க பட்டது இதுகுறித்து சிபிஐ யில் புகார் செய்யப்பட்டது இதன் பேரில் வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணன் அதிகாரி உமா மகேஸ்வரி ரெடிமேடு நிறுவன நிர்வாகி சம்பத்குமார் அதற்கு உடந்தையாக இருந்ததாக செய்யது பாரூக் ஆகியோர் மீது கடந்த 2006-ம் ஆண்டு கூட்டுசதி மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு மீதான விசாரணை கோவையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது நேற்று தீர்ப்பு கூறப்பட்டது வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார் மற்றும் வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணன் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு தலா ரூ 2 லட்சத்து 10, ஆயிரமும் சம்பத் குமாருக்கு ரூ 2 லட்சத்து 50 ஆயிரமும் செய்ய து பாருக்கிற்கு ரூ 50 ஆயிரமும் மொத்தம் ரூ 7 லட்சத்து 20 ஆயிரம் அபராத தொகை விதித்து தீர்ப்பு கூறினார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்