சென்னை : சென்னை , பூந்தமல்லி பகுதியை சேர்ந்த மேரிலதா , வ / 41 , என்பவர் குறைந்த வட்டியில் லோன் பெற்று தருவதாககூறிய சந்தோஷ்குமார் என்ற நபரை நம்பி Processing charge- ஆக ரூ .23,86,920 / – பணத்தை பல தவணைகளாக 2018 ம் ஆண்டிலிருந்து ஆன்லைன் மூலம் செலுத்தி ஏமாந்தது குறித்து மேரிலதா T – 12 பூந்தமல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
T – 12 பூந்தமல்லி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட சந்தோஷ்குமார் , வ / 35 , கோவிலம்பாக்கம் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருவது தெரியவந்தது.இவர் மீது நீதி மன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.