கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பில்டு ரோட்டில் இன்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் பணியில் இருக்கும்போது, வாகனத்தில் சென்ற, முகம் தெரியாத ஒருவர் நடுரோட்டில் தனது மணிபர்சை தவறவிட்டார்.
இதனை கண்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் மணிபர்சை எடுத்து முகவரி தேடி, (ராமநாதபுரம்) தகவல் கொடுத்து, வர சொல்லி, 2 மணிநேரத்தில் தவறவிட்ட, அதே இடத்தில் ஒப்படைத்தார். இதில் ஆதார் அடையாள அட்டை, டிரைவர் லைசென்ஸ், ஏடிஎம், பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆவணங்களை பெற்று கொண்ட நபர் நன்றியையும், அங்கே இருந்த பொதுமக்கள், காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்