அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் 13/06/2020 அன்று சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றுவது குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலை அலுவலர்கள், கனரக வாகன உரிமையாளர்கள், ஹைவே டிபார்ட்மென்ட் அலுவலர்கள், மற்றும் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன்,ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து ஆய்வாளர் திருமதி.ஆனந்தி அவர்கள் கலந்துகொண்டனர்.
சாலை விபத்துகள் நடைபெறாமல் இருக்க பொதுமக்களாகிய உங்களது ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது. சாலையில் சீரான வேகத்தில் செல்லவும், சாலை விதிகளை பின்பற்றவும்.