செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பட்டு பகுதியில் இன்று காலை சூனாம்பேடு ஆய்வாளர் அமிர்தலிங்கம் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த பொழுது பாண்டிச்சேரி இருந்து சென்னை நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் சூனம்படு பகுதியை சேர்ந்த ராம்கி (25). அப்பு (25). ஆகிய இருவர் பாண்டிச்சேரியில் இருந்து1.5 லட்சம் மதிப்புள்ள 300 மதுபாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்தனர் மது பாட்டில்கள் கடத்திய இருவரை கைது கடத்தலுக்கு பயன்படுத்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
செங்கல்பட்டிலிருந்து நமது நிருபர்
இரா.இளங்கோவன்