திருவாரூர்: திருவாரூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது பாண்டிச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்த – பாண்டிச்சேரி மாநிலம், காரைக்கால், வரிச்சிக்குடி, சோனியாகாந்தி நகரை சேர்ந்த நடேசன் மகன் ராஜா @பாம் ராஜா @ ஐயநாரப்பன் (வயது-45). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது, மயிலாடுதுறை, காரைக்கால் போன்ற மாவட்டங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மேற்படி, நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் படி (31.01.2025 ) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.