திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் திருச்சி துறையூரைச் சேர்ந்த அழகுராஜ், நீலாவதி என்பவர்கள் பழனி பாத விநாயகர் கோவில் அருகே ரூபாய் 15,000 மற்றும் ATM அட்டை கொண்ட பையை தவற விட்டனர்.
இதுகுறித்து அவர்கள் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை தொடர்ந்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் தலைமை காவலர் திருமதி.லட்சுமி மற்றும் இரண்டாம் காவலர் திரு.பிரசாத் ஆகியோர் சிசிடிவி கேமரா உதவியுடன் துரிதமாக செயல்பட்டு பணத்தை 1 மணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கலில் இருந்து நமது நிருபர்
திரு.மீரா மைதீன்