திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 26.01.2021- ம் தேதி செவ்வாய்க்கிழமை நாட்டின் 72-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். மேலும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி இ.கா.ப அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையில் 10 வருடங்கள் எந்த ஒரு தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த 70 காவல்துறையினருக்கு தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், மேலும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் மெச்சத்தக்க பணிபுரிந்த 27 காவல்துறையினருக்கு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
