திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் 07.12.19 சனிக்கிழமை நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆனந்தராஜ் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.
பழனி த.சி.கா 14 அணியில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் காவலர்களுக்கு மனச்சோர்வை போக்கும் விதமாக பயிற்சி வகுப்புகளும், காவலர்களுக்கு உடல் பரிசோதனைகளும் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா