வத்தலகுண்டு அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து.முதியவர் பலி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கட்டகாமன்பட்டியை சேர்ந்த சந்தானம் மகன் பழனிச்சாமி (60) இவர் இன்று காலை கட்டகாமன்பட்டி பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது.
ஆண்டிபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் சரக்கு வேனை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து பழனிச்சாமி மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி உயிரிழந்தார். மேற்படி சம்பவம் குறித்து வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வத்தலகுண்டு அருகே கொடைக்கானல் சுற்றுலா சென்ற மினி ஆம்னி பஸ் – லாரி மோதி விபத்து, வாலிபர் பலி, 14 பேர் காயம்
திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் 20 பேர் கொடைக்கானல் சுற்றுலாவிற்கு வேன் மூலம் திருச்சியில் கொடைக்கானல் நோக்கி புறப்பட்டனர். இந்நிலையில் வேன் வத்தலகுண்டு அருகே புறவழிசாலை பகுதியில் வந்து கொண்டிருந்த போது பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கரூர், குளித்தலை, நெய்தலூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பரணி(19) சம்பவ இடத்திலேயே பலியானார் 14 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வத்தலகுண்டு காவல் நிலைய போலீசார் கிரேன் மூலம் வாகனங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா