மதுரை பிபி குளத்தில் குடிபோதையில் காலால் உதைத்த மகன் அடித்துக்கொலை, குக்கரால் தாக்கி தந்தை வெறிச்செயல்
மதுரை பி .பிகுளத்தில் குடிபோதையில் காலால் உதைத்த மகனை குக்கரால்தாக்கிஅடித்துக்கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை பிபி குலம் முல்லை நகர் கண்ணப்பன் முதல் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் இவரது மகன் 21 .பிரவீன் வெல்டிங் வேலை செய்து வருகிறார் .நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பிரவீனுக்கும் அவர் தந்தைக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது .அப்போது குடிபோதையில் தந்தையை காலால் எட்டி உதைத்தார் .இதனால் ஆத்திரமடைந்த தந்தை ராமதாஸ் வீட்டில் இருந்த குக்கரை எடுத்து மகனை சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அம்மா சந்திரா கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து மகனை கொன்ற தந்தையை தேடி வருகின்றனர்.
*********
வைகை ஆற்றுக்குள் தவறிவிழுந்த கணவர் பலி, மனைவி புகார், போலீஸ் விசாரணை
மதுரை வைகை ஆற்றுக்குள் தவறிவிழுந்த கணவர் பலியானது தொடர்பாக மனைவி கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் 48 .இவர் குருவிக்கார சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மணல் பாலத்தின் வழியாக வைகை ஆற்றை கடந்த போது தவறி விழுந்து விட்டார் .இதில் ஆற்றில் சென்ற தண்ணீருக்குள் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார் .இந்த சம்பவம் குறித்து மனைவி மேகலா கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*********
மதுரை வேலை இல்லாத விரக்தியில் இருந்தவர், தூக்கு போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை
மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் . வேலையில்லாத விரக்தியில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகரை சேர்ந்தவர் சகாயராஜ் 50. இவருக்கு நிரந்தர வேலை இல்லை .இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர்வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது தொடர்பாகமனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
*********
மதுரை மாநகராட்சி அண்ணாமாளிகையில் பணியில் இருந்த காவலாளி மயங்கி விழுந்து பலி
மதுரை மாநகராட்சி அண்ணாமாளிகையில் பணியில் இருந்த காவலாளி மயங்கி விழுந்து பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆழ்வார்புரம் வைகை வடகரை யைசேர்ந்தவர் மாயகிருஷ்ணன் 48. இவர் மாநகராட்சி அண்ணா மாளிகையில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.நேற்று இரவு இவர்பணியில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார் .அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாயகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மகன் சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*********
மதுரை கோரிப்பாளையத்தில் டிப்பர் லாரி மோதி பைக்கில் சென்ற டிரைவர் பலி
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் டிப்பர் லாரி மோதி பைக்கில் சென்ற டிரைவர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். வாடி பட்டியை சேர்ந்தவர் வெள்ளிமலை 39 .இவர் மதுரையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.இந் நிலையில் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்தார். அவர் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் விபத்தானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் வெள்ளிமலை பலியானார். இந்த விபத்து தொடர்பாக தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*********
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி