திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல் உட்கோட்டம் மடத்துக்குளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் HC -945 திரு. ராஜேந்திரன் அவர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் காவல் நிலையம் அருகில் உள்ள SBI வங்கி ATM மையத்திற்கு சென்று சோதனை செய்த பொழுது, அங்குள்ள ATM இயந்திரத்தில் 4000 ரூபாய் ரொக்கம் இருப்பதை கண்ட காவலர் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை செய்ததில் யாரும் உரிமை கோராத நிலையில், வங்கி மேலாளரை தொடர்பு கொண்டார்.
தலைமை காவலர் மேற்படி விசாரணை செய்ததில் காரைக்காலைச் சேர்ந்த திரு.அருள் மணிகண்டன் என்ற நபர் ATM இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்றபோது இயந்திர கோளாறு காரணமாக பணத்தை தவற விட்டது தெரியவந்தது. பின்னர் மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ்கண்ணன் அவர்களிடம் தகவல் தெரிவித்த தலைமை காவலர், அந்தப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார். நேர்மை தவறாத காவலரின் செயலினை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்கள் மிகவும் பாராட்டினார்கள்.
திருப்பூர் மாவட்டத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.R.அசோக்குமார்