செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட வண்டலூர் பேருந்து நிலையம் மற்றும் உயிரியல் பூங்கா ஆகிய பகுதிகளில் இன்று பொங்கல் பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு ஜான் லூயிஸ் IAS மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்களும் கூட்டு ஆய்வினை மேற்கொண்டனர். வரும் பண்டிகை நாட்களை முன்னிட்டு தற்காலிக புறநகர் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக ஆலோசித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியேறும் வாகனங்கள் மிக அதிகம் என்பதால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வழிமுறைகள் குறித்தும் வண்டலூர் உட்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.