இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய தலைமைக் காவலர், இரவு ரோந்து சென்ற போது பரமக்குடி பேருந்து நிலையத்தில் கீழே கிடந்த பள்ளிச் சான்றிதழ்களை எடுத்து உரிமையாளர் தெரியாத நிலையில், சான்றிதழ் பற்றிய விவரங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து உரிய நபர் காவல் நிலையத்திற்கு வந்து சான்றிதழ்களை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்தார். இந்நிலையில், பரமக்குடி தனிப்பிரிவு காவலர் திரு.செல்வராஜ் (HC 439) மற்றும் திரு.ஆனந்தக்குமார் (Gr I 1908) ஆகியோர் சான்றிதழ்களை உரிய மாணவியிடம் நேரில் சென்று ஒப்படைத்தார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமிஇராமநாதபுரம்