சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் சிறப்பு உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” தொடர்ச்சியாக, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இன்று 22.2.2021 திருவேற்காடு, காடுவெட்டி, ஒத்த பாலம், அருகே கண்காணித்து அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.கலையரசன் (எ) கலை (எ) டியூப் கலை, வ/19, திருவேற்காடு 2.மாரி, பெண், வ/55, பழைய வண்ணாரப்பேட்டை, ஆகியோரை கைது செய்து T-5 திருவேற்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 13 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஓட்டேரி பகுதியில் விற்பனை செய்வதற்காக, 8 கிலோ கஞ்சா வைத்திருந்த திருநங்கை நான்சி (எ) கோகுல் என்பவர் P-2 ஓட்டேரி காவல் குழுவினரால் கைது
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” தொடர்ச்சியாக, P-2 ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், 22.02.2021 அன்று ஓட்டேரி, டோபிகான வீட்டு வசதிவாரிய குடியிருப்பின் அருகில் கண்காணித்த போது, சட்ட விரோதமாக அங்கு விற்பனைக்கு வேண்டி கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த திருநங்கை நான்சி (எ) கோகுல், வ/24, , வடபழனி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
