கோவை : மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு. பெரியய்யா,இ.கா.ப., அவர்கள் கோவிட்19 பரவலை தடுப்பதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத (மார்ச் 2020) சம்பளத்தை (ரூபாய் 25,788/-) வழங்கிய கோவை மாவட்ட ஆயுதப்படை முதல்நிலைக் காவலர் 1018 பாபு என்பவரை அழைத்து அவரது நற்செயலை பாராட்டி வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்