கோவை பக்கம் உள்ள எஸ். எஸ். குளத்தைச் சேர்ந்தவர் முருகேசன், இவரதுமகன் சரத் (வயது 19) இவர் நேற்று தனது அண்ணன் பரத் ( வயது 25) என்பவருடன் பைக்கில் கோவை -சத்தி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.பைக்கை தம்பி சரத் ஓட்டினார். பரத் பின்னால் இருந்தார். சரவணம்பட்டி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ் (எண் 11)அவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் தம்பி சரத் படுகாயமடைந்துஅதே இடத்தில் பலியானார். அண்ணன் பரத் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார்வழக்குப்பதிவு செய்து நீலகிரி மாவட்டம் குன்னூர் சேர்ந்த பஸ் டிரைவர் சக்திவேல்(வயது 36) என்பவரை கைது செய்தனர்.. மேலும் விசாரணை நடந்துவருகிறது.
