• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Tuesday, May 13, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

    திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

    ஆரோக்கியம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி

    ஆரோக்கியம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி

    மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

    மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

    புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

    புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

    திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

    ஆரோக்கியம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி

    ஆரோக்கியம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி

    மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

    மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

    புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

    புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

காவல்துறை தலைமை இயக்குனர் முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம்

தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி வழங்கும் விழா

by Admin
August 4, 2022
in CM News, Latest News, Police Medals
Reading Time: 1 min read
99 1
A A
0
சென்னை : சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் 31/07/2022  அன்று தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி வழங்கும் விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி வழங்கும் விழாவில்  இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் கலந்து கொண்டு கொடியினை தமிழக முதலமைச்சரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் கூறியதாவது,  தமிழக காவல்துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. குடியரசு தலைவரின் உடைய வண்ணக் கொடி என்ற மிக மிக உயர்ந்த அங்கீகாரத்தை நம்முடைய தமிழக காவல்துறை பெறுகிறது. அதனை வழங்குவதற்கு வந்துள்ள மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் அவர்களுக்கு  நன்றியை நான் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இது  தமிழக காவல்துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே கிடைத்திருக்கக் கூடிய வரலாற்று மிகு பெருமை. இது தனிப்பட்ட ஒரு காவலருக்கு கிடைத்த பெருமை அல்ல. இது ஒட்டுமொத்தமாக அனைத்து காவலர்களுக்கும் கிடைத்திருக்க கூடிய பெருமை. தமிழ்நாடு காவல்துறையின் குறிப்பிட்ட ஒரு சாதனைக்கு கிடைத்த விருது அல்ல. தமிழ்நாடு காவல்துறை காவலர்கள் 160 ஆண்டுகள் ஆற்றிய பணிக்கு கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம் இது.
 இரவு பகல் பாராது வெயில் மழை பாராது, ஏன் தன் உயிரை பற்றி கூட கவலைப்படாமல், ஆற்றிய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது.  முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாள் குடியரசு தலைவரின் கொடியினை தமிழ்நாடு காவல்துறைக்கு பெற்றுத் தந்தார். தமிழக காவல்துறையானது தனக்குத்தானே சல்யூட் அடித்துக் கொள்ள வேண்டிய பெருமை இது. தமிழக காவல்துறையானது தனக்குத் தானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்ள வேண்டிய சிறப்பு இது.
பழம்பெறும் நகரமான இந்த சென்னை மாநகரத்தில் 1856 ஆம் ஆண்டு அன்றைய மதராஸ் மாநகரில் தான் முதன் முதலில் காவல்துறை வரலாறு தொடங்கியது. 1859 ஆம் ஆண்டு மதராஸ் மாகாண காவல்துறை சட்டம் இயற்றப்பட்டது. எனவே நமது காவல்துறை என்பது இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு முன்மாதிரியான காவல்துறை.
பொது அமைதியை காப்பது.
குற்றங்களில் இருந்து மக்களை காப்பது
சட்டங்களை காப்பது பொதுமக்களை காப்பது
ஒட்டுமொத்தமாகச் சொன்னால் மக்களை காப்பது.
இதுதான் உங்களது முழு முதல் பணி. இத்துறையில் முதல் முதலாக இந்தியாவிலேயே மகளிர் காவலர்களை நியமித்தவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். 1973 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் திருமதி.உஷா ஒரு தலைமை காவலர் மற்றும் இருபது காவலர்கள் சென்னை மாநகரில் பணி அமர்த்தப்பட்டனர்.
இன்று காவல்துறையில் 1 டிஜிபி, 2 ஏ.டி. ஜி. பி, 14 ஐ ஜி முதலிய பெண் காவல் உயர் அதிகாரிகளும், 20000 பெண் காவலர்களும் களப்பணி ஆற்றி வருகிறார்கள். பெண்களுக்கு காவல்துறையில் அதிகாரம் அளித்ததில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு அதை அளித்தவர் கலைஞர்.
கைரேகை பிரிவு 
மோப்பநாய் பிரிவு 
புகைப்படப்பிரிவு 
கணினி தொழில்நுட்ப பிரிவு 
கடலோரப் பாதுகாப்பு பிரிவு 
மகளிர் கமாண்டோ பிரிவு 
என பல்வேறு பிரிவுகள் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக மட்டுமல்ல முன்னணியிலும் நமது தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது.
அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டிகளில், தமிழ்நாடு காவல்துறை கடந்த 30 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு பல பதக்கங்களை வென்று வருவதை நினைக்கும் போது, ஒவ்வொரு தமிழ் நாட்டவரும் பெருமை கொள்ளக்கூடிய அளவில் அமைந்திருப்பதாக கூறினார்.
கடந்த ஓராண்டு காலமாக காவல்துறையின் செயல்பாடு முன்பை விட மிக அதிக அளவில் பாராட்டும் படியாக உள்ளது. மதக்கலவரங்களோ, ஜாதி மோதல்களோ, மக்களை பீதிக்குள்ளாக கூடிய குற்ற நிகழ்வுகளோ இல்லை.
தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் அமைதி நிலவுகிறது. துப்பாக்கிச் சூடு இல்லை. கள்ளச்சாராய சாவுகளும் இல்லை. காவல் நிலைய மரணங்கள் குறைந்துள்ளன. காவல் நிலைய மரணம் 2018 ஆம் ஆண்டு 17 மரணங்கள் என்று பதிவானது. 2021 ஆம் ஆண்டு நான்கு மரணங்களாக குறைந்துள்ளது.  காவல் நிலைய மரணங்களே இல்லை என்று சொல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
 குற்றங்களை குறைக்கும் துறையாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சிறு சிறு குற்றம் நடந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடக்கூடாது.
 பாலியல் போக்சோ சட்டங்களில் சிக்குபவர்களை உடனடியாக கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளில் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
 2021 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 12 லட்சம் பேர் காவல் நிலையங்களில் புகார் அளித்திருக்கிறார்கள். 7 லட்சத்து 56 ஆயிரத்து 753 குற்ற வழக்குகள் பதிவு செய்திருக்கிறது காவல்துறை. இவற்றில் தொடர்புடைய ஒன்பது லட்சத்து 27 ஆயிரத்து 763 பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் 7இ76இ000 மனுக்கள் காவல் நிலையங்களில் விசாரிக்கப்பட்டு, முடிவு காணப்பட்டுள்ளது.
7.76 லட்சம் மனுக்களில் 75 ஆயிரம் மனுக்கள் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெறப்பட்டவை. இத்தனை பேர் காவல் நிலையங்களை நாடி செல்கிறார்கள் என்று சொன்னால் மக்கள் காவல்துறை மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் நன்மதிப்பும் காரணம் என்று நமக்கு தெளிவாகிறது.
அமைதியான மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால்தான் ஏராளமான புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. இவை அனைத்தும் தமிழகம் அமைதியாக இருக்கிறது என்பதன் அடையாளங்கள் ஆகும்.
 காவலர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதர்க்காக ஓய்வு பெற்ற நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில், காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று பல நல திட்டங்களை நிறைவேற்றி தருவோம் என உறுதி அளிக்கிறேன்.
காவல் அதிகாரிகளும் காவல் ஆளுநர்களும் கவலையின்றி பணியாற்றுவதற்கான சூழல்களை அமைத்துத் தர இந்த அரசு தயாராக உள்ளது. குடியரசு தலைவரின் விருது பெற்றிருக்கும் தமிழக காவல்துறையினர் தங்கள் காக்கிச்சட்டையின் அதன் அடையாளமான கொடியினை அணிந்து செல்வார்கள்.
“நிஸான்” என்று அழைக்கப்படும்  இந்த சின்னம் காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் அதோடு காவலர்களுக்கு மேலும் ஒரு நற்செய்தியை நான் சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாடு காவல்துறை தொடங்கி 160 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த நிலையில், இன்று குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி பெரும் நிகழ்வை முன்னிட்டு காவல்துறை தலைமை இயக்குனர் முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு காவல்துறை குடியரசு தலைவரின் கொடியினை பெற்றவையொட்டி, மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பு அஞ்சல் உரையினை வெளியிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு. க ஸ்டாலின் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில்  தலைமைச் செயலாளர் முனைவர் திரு  இறையன்பு இ ஆ ப, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு பணீந்திர ரெட்டி இ. ஆ. ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரை  காவல் துறை தலைமை இயக்குனர் முனைவர். சைலேந்திரபாபு இ. கா. ப, அவர்களும், சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் இ கா ப அவர்கள்  நன்றியுரை   ஆற்றினார்.

Related

Share136Tweet85Send

மேலும் செய்திகள்

லாரி மீது கார் மோதி விபத்து

லாரி மீது கார் மோதி விபத்து

May 12, 2025
சிறப்பு உதவி ஆய்வாளரை பாராட்டிய ஆட்சியர்

சிறப்பு உதவி ஆய்வாளரை பாராட்டிய ஆட்சியர்

May 12, 2025
ரேஷன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல்

May 12, 2025
வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

May 12, 2025
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.