சென்னை : சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர் சதாம் உசேன் (கா.56047) 07.02.2021 அன்று காலை, போரூர் சந்திப்பு அருகே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செல்லும் வழியில் பாதுகாப்பு பணியிலிருந்தபோது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், அப்பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 50 வயது நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து வலிப்பு வந்து தவித்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட காவலர் சதாம் உசேன் தனது கையிலிருந்த சாவியை அந்த பெரியவரிடம் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்திக் கொண்டே, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தார். சுமார் அரை மணி நேரம் அந்த பெரியரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததும், அவ்வாகனத்தில் அந்த பெரியவரை ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மனித நேயத்துடன் ஆபத்தில் இருந்த பெரியவருக்கு உதவிய ஆயுதப்படை காவலரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (19.02.2021) நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்