சென்னை : சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பல்லாவரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனால் காரில் பயணித்த வயதான மூதாட்டி மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து காரில் சிக்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இதன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாம்பரம் தீயணைப்பு படை வீரர்கள் காரில் சிக்கியவர்களை உயிருடன் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா