கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள பழமைவாய்ந்த வீரட்டானேசுவரர் கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள், ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளையடித்து செல்லும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
பின்னர் சிசிடிவி கேமராக்களை உடைத்த கொள்ளையர்கள், 4 உண்டியல்களின் பூட்டை உடைத்து அதிலிருந்த சுமார் 3 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
காலையில் வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த பூசாரி இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். திருக்கோவிலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி